Saturday, November 28, 2009

என் இரு கைகளையும் பின்னால் கட்டி விலங்கிட்டபோது உணர்ந்தேன்

-செந்தமிழன் சீமான்

என் இரு கைகளையும் பின்னால் கட்டி விலங்கிட்டபோது உணர்ந்தேன் உலக அரங்கில் தமிழரின் அடிமை வாழ்வை. உலக நாடுகளிலேயே அதிகம் காதலித்த நாடு கனடா. காரணம் தனிநபர் உரிமை, பேச்சுச் சுதந்திரம் நீதியான முறையில் கடைப்பிடிக்கப்படும் நாடு கனடா. என் பேச்சு வன்முறையை தூண்டுகிறதாம். 2007லும் வந்து பேசியிருக்கிறேன் அதன் பின் என்ன வன்முறை நிகழ்ந்தது எனக் கேட்டேன். பதில் தெரியாது முழித்தார் கனேடிய குடிவரவு குடியகல்வு துறை அதிகாரி. 2007 ல் களத்தில் தலைவரும் போராளிகளும் நின்றபோது கனடாவின் அமைதியை சீர்குலைக்காத என் பேச்சு, அனைத்தையும் அழித்துவிட்டோம் என்று உலகமே ஒப்புக்கொண்ட பின்னரான இப்போதா சீர்குலைத்துவிடும்..? பலமுறை கெஞ்சினேன்.. ஒருமுறை பேசிவிட்டு போகிறேன் என்று, முதலில் "ஓம்" என்றார்கள்; பிறகு தொலைபேசியில் யாருடனோ பேசிவிட்டு "மாட்டேன்" என்றார். "ஏன்?" என்றேன் "இதுதான் அரசியல்" என்றார் கனேடிய குடிவரவு குடியகல்வு துறை அதிகாரி.

No comments:

Post a Comment

நிறையவே திட்டவேணும்போல இருக்கும்... இருப்பினும் அவையடக்கமாய் ஒரு சில வார்த்தைகள் கிறுக்குங்கள்.