நன்றி புதியபாரதி, கனடா
தூய்மையான உள்ளத்தோடு துடிப்புள்ள
ஒரு மைந்தனை தமிழ் ஈழத்திற்காய்த் தந்தவனே
தமிழீழத்தைப் பூமிப்பந்தில் தெரியப்படுத்திய
ஒரு தேச தலைவனின் தந்தையே
திருவேங்கடம் வேலுப்பிள்ளை என்ற
திருநாமம் கொண்டவனே..
உன் மைந்தனால் உனக்குப் பெருமை
உன்னால் உன் மைந்தனுக்குப் பெருமை
அரக்கரின் சிறையில் அகவை எண்பத்தியாறில்
இரக்கம் இல்லாதவரின் இம்சை அறையில்
இனத்தை விட்டு ஏறிப் பறந்தவனே
காலச் சுழியில் களத்து வேங்கைபோல்
ஆகிவிட்ட கரிகாலன் தந்தையே
வேலுப்பிள்ளை என்ற வித்துவனே
சீலமுடன் நின்ற செம்பழமே
உன் பிரிவால் எங்கள் விழிகள்
உடைப்பெடுத்து ஓடுதையா
சென்றுவா தந்தையே சென்றுவா
எங்கள் நிலத்தின் தந்தையே சென்றுவா
உன் மைந்தன் தேசம் ஓர்நாள் உருவெடுக்கும்
தேசத்தின் வரலாற்றில் உனக்கு முதல் இடமிருக்கும்
வண்ணத்து இறைவன் மலர்மடியில் நீ உறங்கு -எம்
எண்ணத்து அறையில் என்றும் நீ விழித்திருப்பாய்...
Thursday, January 7, 2010
Subscribe to:
Posts (Atom)