Saturday, November 7, 2009

வளரிக்கு எனது வாழ்த்துக்கள்

வளரியை வளர்க்க வளமாக்க அரிய பங்காற்றும் என் நண்பன் சுதனுடன் ஒருமுறை பேசிவிட ஆவல் கொண்டு தேடுகிறேன். பலமுறை பலரிடம் கேட்டு களைத்துவிட்டேன். இனி இயக்குனர் சேரனிடம்தான் செல்ல வேண்டும் “சுதன் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்று கதை சொல்லி ஓர் படம் எடுத்தாவது அது உன் விமர்சனத்துக்குள் சிக்கியாவது என்னைத் தொடர்பு கொள்ள. என்ன..? இந்த கருத்தையாவது வாசிப்பாயா? யாராவது நெருங்கியவர்கள் வாசித்தாலாவது சொல்லி விடுங்கள் “கனடாவிலிருந்து இரசிகன் ஓருவன் சுகம் கேட்டுள்ளான்” என்றாவது. தொடரட்டும் உன் பணி..!