புலம்பெயர் தேசமெங்கும் முன்னரைவிட பல மடங்கு உணர்ச்சி மேலோங்க தேசிய நினைவெழுச்சி நாளுக்காய் ஈழத் தமிழ் மக்கள் தயாராகிறார்கள்.
தங்களுக்கு கிடைக்கப் போகும் புதிய செய்தி என்ன? அந்தச் செய்தியை யார் உரிமையுடன் வழங்கப் போகின்றார்கள்? அதனைத் தொடர்ந்து எமது கடமை எவ்வாறு அமையப் போகின்றது? என்பன போன்ற எண்ணிலடங்கா வினாக்களுடன் எதிர்வரும் வெள்ளிப் பொழுதிற்காய் அனைத்துலக ஈழத் தமிழ் உறவுகள் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கிறார்கள்.
முன்னரைவிட பல தமிழர் வணிக நிறுவனங்கள் இம்முறை தாமே முன் வந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது கார்த்திகை தமது வணிக நிறுவனங்களை மூடி உணர்ச்சி மிக்க எழுச்சி நிகழ்வில் தங்களையும் இணைத்துக்கொள்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களின் வருகையை எதிர்பார்த்து இவ்வருட தேசிய நினைவெழுச்சி மண்டப ஏற்பாடுகள் கனடா ரொரன்டோ நகரில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.
துரோக கும்பல்களினால் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக நிகழ்வு மண்டப விபரங்கள் வியாழன் பிற்பகல் அல்லது வெள்ளி காலை தமிழ் வானொலிகள் ஊடாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.