Saturday, December 26, 2009

கிழக்கின் அலைமட்டுமா எம் இனம் தின்றது..?


வானுக்கு அழகு வெள்ளை மேகம்
மேகத்துக்கு அழகு சோலைக்குள் பெய்யும் மழை
மழைத்துளிக்கு அழகு முற்றத்து வெள்ளம்
வெள்ளத்திற்கு அழகு அமைதியாய் ஓடும் ஆற்றுநீர்
ஆற்றுநீருக்கு அழகு பேதமின்றிக் கலக்கும் கடல்
கடலுக்கு அழகு துள்ளித் துள்ளி இசைமீட்டும் அலை.

இப்படித்தான் இயற்கையை இரசித்தான்
இந்துசமுத்திரத் தமிழன் இரண்டாயிரத்து நான்குவரை...,
அதன்பின் அறிந்துகொண்டான் அழகாய் இருப்பவரும்
அருகில் இருப்பவரும் எம்மை ஓர்நாள் அசிங்கப்படுத்துவர் என்பதை..!
கிழக்கின் அலைமட்டுமா எம் இனம் தின்றது..?
மகிந்தவின் அமைச்சனே நீயும்தான்..!

- ஆக்கம்: சிநேகிதன் கஜன் Dec 26, 2009 -