Tuesday, February 23, 2010
Thursday, January 14, 2010
இனிக்கும் தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்..!
வையகத்து தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிக்கும் தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்..!
Wednesday, January 13, 2010
நீங்களெல்லாம் சிரிக்கலாம்.. சிரியுங்கள்..!!
- சிநேகிதன் கஜன் -
அழகிகளே நீங்கள்
அழகாய்த்தான் இருக்கிறீர்கள்
உங்கள் குடும்பத்து புன்னகை
அழகாய்த்தான் இருக்கிறது...
அப்பா சொன்னாரா..?
அவர் ஆசீர்வாதத்தின் பலனாய்
உங்களைப்போல் பல ஆயிரம் அழகிகள்
புதையுண்டும், எரியுண்டும், குதறுண்டும்
போனார்கள் என்பதை....
உங்களுக்குத் தெரியுமா..?
நாங்கள் புன்னகைத்து
பல தசாப்தங்கள் ஆகிறது
எறும்புக்கும் தீனி போட்ட இனம் - இன்று
எலும்பும் சதையுமாய் உயிரோடு புதைகிறது...
நீங்கள் சிரியுங்கள்..
ஆனால் அப்பாவைப் பாருங்கள்
சிரிப்பில் செயற்கை இருக்கிறது
உயிர் போகும்வரை அவர்..,
செவிகளில் ஒலிக்கும் ஒப்பாரியையும்
சுவாசத்தில் மணக்கும் பிண வாடையையும்
நாக்குகளில் சுவைக்கும் குழந்தை இரத்தத்தையும்
விழிகளில் தெரியும் நிர்வாணங்களையும்
மறந்துவிட்டு.., இயற்கையாய் அவர் எப்படி சிரிப்பது..?
நீங்கள் சிரியுங்கள்...
எப்போதாவது ஒருவேளை
உணவுக்காய் தவமிருந்ததுண்டா..?
உங்கள் விருப்பின்றி யாரேனும்
துணி அவிழ்த்ததுண்டா..?
மரத்தின் கீழ், சேற்றின் மேல் ஒருநாளேனும்
உறங்கிய அனுபவம் உங்களுக்குண்டா..?
உங்கள் பரம்பரையில் வயிற்றுக்குள்ளிருந்த
குழந்தைமீது குண்டுபாய்ந்த வரலாறு உண்டா..?
நீங்கள் சிரியுங்கள்..
இன்றேல்லாம் உலகுக்கு
கொன்றவன் நல்லவன்
காத்தவன் கெட்டவன்
வழங்கிய கைகள் எல்லாம் - வாங்குவதற்கு
வரிசையில் நிற்கையில்
நீங்களெல்லாம் சிரிக்கலாம்
சிரியுங்கள்..
பொன்சேகா உங்களுக்கோர் விண்ணப்பம்..!
எய்தவன் எங்கோயிருக்க அம்பை
நோகும் பழக்கம் எமக்கில்லை - இனியாவது..,
எமக்கு எது செய்வாய் என்பதைவிட
எதுவுமே செய்யாமல் இரு..
அது போதும்..!!!

அழகிகளே நீங்கள்
அழகாய்த்தான் இருக்கிறீர்கள்
உங்கள் குடும்பத்து புன்னகை
அழகாய்த்தான் இருக்கிறது...
அப்பா சொன்னாரா..?
அவர் ஆசீர்வாதத்தின் பலனாய்
உங்களைப்போல் பல ஆயிரம் அழகிகள்
புதையுண்டும், எரியுண்டும், குதறுண்டும்
போனார்கள் என்பதை....
உங்களுக்குத் தெரியுமா..?
நாங்கள் புன்னகைத்து
பல தசாப்தங்கள் ஆகிறது
எறும்புக்கும் தீனி போட்ட இனம் - இன்று
எலும்பும் சதையுமாய் உயிரோடு புதைகிறது...
நீங்கள் சிரியுங்கள்..
ஆனால் அப்பாவைப் பாருங்கள்
சிரிப்பில் செயற்கை இருக்கிறது
உயிர் போகும்வரை அவர்..,
செவிகளில் ஒலிக்கும் ஒப்பாரியையும்
சுவாசத்தில் மணக்கும் பிண வாடையையும்
நாக்குகளில் சுவைக்கும் குழந்தை இரத்தத்தையும்
விழிகளில் தெரியும் நிர்வாணங்களையும்
மறந்துவிட்டு.., இயற்கையாய் அவர் எப்படி சிரிப்பது..?
நீங்கள் சிரியுங்கள்...
எப்போதாவது ஒருவேளை
உணவுக்காய் தவமிருந்ததுண்டா..?
உங்கள் விருப்பின்றி யாரேனும்
துணி அவிழ்த்ததுண்டா..?
மரத்தின் கீழ், சேற்றின் மேல் ஒருநாளேனும்
உறங்கிய அனுபவம் உங்களுக்குண்டா..?
உங்கள் பரம்பரையில் வயிற்றுக்குள்ளிருந்த
குழந்தைமீது குண்டுபாய்ந்த வரலாறு உண்டா..?
நீங்கள் சிரியுங்கள்..
இன்றேல்லாம் உலகுக்கு
கொன்றவன் நல்லவன்
காத்தவன் கெட்டவன்
வழங்கிய கைகள் எல்லாம் - வாங்குவதற்கு
வரிசையில் நிற்கையில்
நீங்களெல்லாம் சிரிக்கலாம்
சிரியுங்கள்..
பொன்சேகா உங்களுக்கோர் விண்ணப்பம்..!
எய்தவன் எங்கோயிருக்க அம்பை
நோகும் பழக்கம் எமக்கில்லை - இனியாவது..,
எமக்கு எது செய்வாய் என்பதைவிட
எதுவுமே செய்யாமல் இரு..
அது போதும்..!!!
Thursday, January 7, 2010
கண்ணீர் அஞ்சலி
நன்றி புதியபாரதி, கனடா
தூய்மையான உள்ளத்தோடு துடிப்புள்ள
ஒரு மைந்தனை தமிழ் ஈழத்திற்காய்த் தந்தவனே
தமிழீழத்தைப் பூமிப்பந்தில் தெரியப்படுத்திய
ஒரு தேச தலைவனின் தந்தையே
திருவேங்கடம் வேலுப்பிள்ளை என்ற
திருநாமம் கொண்டவனே..
உன் மைந்தனால் உனக்குப் பெருமை
உன்னால் உன் மைந்தனுக்குப் பெருமை
அரக்கரின் சிறையில் அகவை எண்பத்தியாறில்
இரக்கம் இல்லாதவரின் இம்சை அறையில்
இனத்தை விட்டு ஏறிப் பறந்தவனே
காலச் சுழியில் களத்து வேங்கைபோல்
ஆகிவிட்ட கரிகாலன் தந்தையே
வேலுப்பிள்ளை என்ற வித்துவனே
சீலமுடன் நின்ற செம்பழமே
உன் பிரிவால் எங்கள் விழிகள்
உடைப்பெடுத்து ஓடுதையா
சென்றுவா தந்தையே சென்றுவா
எங்கள் நிலத்தின் தந்தையே சென்றுவா
உன் மைந்தன் தேசம் ஓர்நாள் உருவெடுக்கும்
தேசத்தின் வரலாற்றில் உனக்கு முதல் இடமிருக்கும்
வண்ணத்து இறைவன் மலர்மடியில் நீ உறங்கு -எம்
எண்ணத்து அறையில் என்றும் நீ விழித்திருப்பாய்...
தூய்மையான உள்ளத்தோடு துடிப்புள்ள
ஒரு மைந்தனை தமிழ் ஈழத்திற்காய்த் தந்தவனே
தமிழீழத்தைப் பூமிப்பந்தில் தெரியப்படுத்திய
ஒரு தேச தலைவனின் தந்தையே
திருவேங்கடம் வேலுப்பிள்ளை என்ற
திருநாமம் கொண்டவனே..
உன் மைந்தனால் உனக்குப் பெருமை
உன்னால் உன் மைந்தனுக்குப் பெருமை
அரக்கரின் சிறையில் அகவை எண்பத்தியாறில்
இரக்கம் இல்லாதவரின் இம்சை அறையில்
இனத்தை விட்டு ஏறிப் பறந்தவனே
காலச் சுழியில் களத்து வேங்கைபோல்
ஆகிவிட்ட கரிகாலன் தந்தையே
வேலுப்பிள்ளை என்ற வித்துவனே
சீலமுடன் நின்ற செம்பழமே
உன் பிரிவால் எங்கள் விழிகள்
உடைப்பெடுத்து ஓடுதையா
சென்றுவா தந்தையே சென்றுவா
எங்கள் நிலத்தின் தந்தையே சென்றுவா
உன் மைந்தன் தேசம் ஓர்நாள் உருவெடுக்கும்
தேசத்தின் வரலாற்றில் உனக்கு முதல் இடமிருக்கும்
வண்ணத்து இறைவன் மலர்மடியில் நீ உறங்கு -எம்
எண்ணத்து அறையில் என்றும் நீ விழித்திருப்பாய்...
Monday, January 4, 2010
"ஐசார்க் நியூட்டன்" பிறந்தநாள் இன்று

ஐசாக் நியூட்டன் ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். இவரது வாழ்நாள் அக்காலத்தில் வழக்கிலிருந்த ஜீலியன் நாட்காட்டியின்படி டிசம்பர் 25, 1642 இலிருந்து மார்ச் 20, 1727 வரை எனவும் பின்னர் திருத்தப்பட்ட தற்போது வழக்கிலுள்ள ஜோர்ஜியன் நாட்காட்டியின்படி ஜனவரி 4, 1643 இலிருந்து மார்ச் 31, 1727 வரையும் இருந்ததாக அறிய முடிகிறது.
நியூட்டன் இங்கிலாந்து நாட்டில், லிங்கன்ஷயர் கவுண்டியில் கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இவரது தந்தையார் இறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் கழிய நியூட்டனை அவரது பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டு, தாயாரும் தனது புதிய கணவருடன் வாழச் சென்றுவிட்டார்.
நியூட்டன் கிராந்தாம் கிறமர் பாடசாலையில் பயின்றார். 1661 ல் கேம்பிறிஜ் திரித்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல் அரிஸ்ட்டாட்டிலைப் பின்பற்றியதாகவேயிருந்தது. ஆனால் நியூட்டன்; டெஸ்கார்ட்டஸ், கலீலியோ, கோப்பர்னிக்கஸ் மற்றும் கெப்ளர் போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களைக் கற்கவிரும்பினார். 1665 ல் பைனோமியல் தேற்றத்தைக் கண்டுபிடித்ததுடன், பிற்காலத்தில் நுண்கணிதம் என வழங்கப்பட்ட புதிய கணிதத் கோட்பாடொன்றை உருவாக்கத் தொடங்கினார். 1665ல் இவர் பட்டம் பெற்றதும், பெருங் கொள்ளைநோய் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அடுத்த இரண்டு வருடங்கள் வீட்டிலிருந்தபடியே நுண்கணிதம், ஒளியியல், ஈர்ப்பு என்பவை பற்றி ஆராய்ந்தார்.
புவிசார் மற்றும் விண்வெளிசார் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளை முதன்முதலில் விளக்கியவர் இவரேயாவார். இவர் அறிவியல் புரட்சியுடனும், சூரியமையக் கோட்பாட்டின் வளர்ச்சியுடனும் தொடர்புபட்டிருந்தார். கோள்களின் இயக்கத்துக்கான கெப்ளரின் விதிகள் தொடர்பில் கணிதரீதியான நிறுவல்களை வழங்கியதில் நியூட்டனுக்கும் பங்கு உண்டு. வால்வெள்ளி போன்ற விண்பொருட்களின் சுற்றுப்பாதைகள் நீள்வட்டமாக மட்டுமின்றி, பரவளைவாகவும், அதிபரவளைவாகவும்கூட இருக்கலாம் எனவும் வாதித்து மேற்படி விதிகளை விரிவாக்கினார். வெண்ணிற ஒளிஇ பல நிற ஒளிகளின் சேர்க்கையென முதலில் விளக்கியவரும் இவரே. ஒளி, துணிக்கைகளால் ஆனது என்ற வாதங்களுக்காகவும் இவர் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார்.
Subscribe to:
Posts (Atom)