Tuesday, December 15, 2009

"வேட்டைக்காரன்" அரட்டை

வேட்டைக்காரனுக்கான அரட்டை முகநூல் பதிவினருக்கிடையில் இன்று இடம்பெற்றது. அதில் சில பதிவுகளை இங்கே தருகின்றோம்.
"தமிழ்த் தேசியம் வாழுகிறதென்றால்; மானமுள்ள தமிழ்ச்சாதி வாழ்கிறதென்றால் இனி எவருமே எமது தலையில் மிளைகாயை அரைக்க முடியாது என்பதை வேட்டைக்காரனை வேட்டையாடி நிரூபித்துக் காட்டுங்கள். -சுவிஸ் இளையோர் பேரவை" என்ற பதிவு முகநூல் பதிவாளர் இளவரசனின் பக்கத்தில் இன்று காலை இணைக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து கஜனுக்கும் இளவரனுக்கும் இடையில் இடம்பெற்ற வாதங்களை நீங்கள் கீழே படியுங்கள்.......... உங்கள் கருத்துக்களை பதியுங்கள்...........
கஜன்: Sun Pictures விநியோகிப்பில் தெனாவட்டு, திண்டுக்கல் சாரதி, படிக்காதவன், காதலில் விழுந்தேன், கண்டேன் காதலை திரையிடும்போது வராத மண் பாசம் வேட்டைக்காரனுக்கு மட்டும் வந்ததன் காரணம்..? கேட்டால்..., சிங்களவர் இசையுதவி செய்து இருக்கிறாராம்.. அப்படியெண்டால் இலங்கைத் தமிழன் தினேஸ் பாடியிருக்கிறாரே...?? .. உண்மை இதுதான்..., ஐரோப்பாவின் விநியோக உரிமை ஐங்கரன் கருணாவுக்கும், கனடாவின் உரிமை Elane Cinema அசோகனுக்கும் கிடைத்திருந்தால் மண் பாசம் மரித்துப் போயிருக்கும்.
இளவரசன்: Kajan, fictions r about Aingeran and other individual story. we have no evidence to prove. so we can't act based on that but we can act on the facts on that hand.. rationalists relay on facts, I am a rationalist and i act on facts.. .. fictions r created by many against many reasons. that is not issue, we must be smarter to make sense out of stories on the hand..
கஜன்: அண்ணா..! உங்களுடைய கருத்துக்களையும் காரணங்களையும் ஏற்கிறேன். ஆனால் இதை நாம் செய்வதன் முலம் எதுவுமே சாதிக்கமாட்டோம்.. முட்கம்பி சிறைக்குள் வாடும் மக்களுக்கு இதனால் எந்த பலனும் இல்லை. இராஜ் விரரட்ண எனக்கு தெரிந்த பல தமிழர்களுக்கு நல்ல நண்பன். Royal College மாணவன் இலங்கையில் பிரபலமான இசையமைப்பாளர்.. இவரை எதிர்ப்பதன் முலம் இன்னமும் எதிரிகளை சம்பாதிக்கிறோம்..
இளவரசன்: நட்பு காரணம் இப்போது புரிகின்றது..நன்று.. நட்பு உங்களுக்கு இறந்து போன என் மக்களில் உயிர்கள் எனக்கு.. அவ்வளவுதான்.........
கஜன்: 1983ல் தேயிலை வியாபாரியாக இருந்த தமிழன் காட்டிக் கொடுத்து எங்கள் உறவினரின் வீடுடைக்க.. அடைக்கலம் தந்து காத்தவர்கள் பக்கத்து வீட்டு சிங்களவர். எல்லா தமிழர்களும் நல்லவர்கள் இல்லை (என்னைப்போல்..?) அதேபோல் எல்லா சிங்கள மக்களும் கெட்டவர்கள் இல்லை.
இளவரசன்: கெட்டவர்கள் என்று ஒருபோதும் நான் சொல்லவில்லை. ஆனால், சிங்கள இராணுவம் இரத்தக்கரைகள் படிந்தது அதற்கு பாட்டு இசைத்து என் அப்பன் என்றாலும் எதிர்ப்பேன்.. அது தமிழனாக இருந்தாலும்....... இந்த புறக்கணிப்பு மட்டுமல்ல இதர புறக்கணிப்பு போரில் தமிழர் கடினமாக ஈடுபடுவதில்லை. அதுவே நாம் தாழ்ந்து போய்கொன்றிருக்கின்றோம். உணர்வுகளால் நாம் இணைகின்ற நாம் உண்மையான நடவடிக்கைகளில் இறங்குவதில்லை. இன்று நாம் புறக்கணித்துக்காட்டினால் நாளை தமிழ்நாட்டுத் நடிகர்கள் எமக்கெதிராக இயங்கமாட்டார்கள். அவர்களுக்கு பாட்டு புகுத்தல் அவசியமாகின்றது. புறக்கணிப்பு என்பது பல சமுதாயங்களில் பாவனையில் இருந்து வருகின்றது. நாம் தானே..எமக்கு உணர்ச்சியால் கதைச்சி கிழிப்பம் ஆனா கொஞ்சம் யோசித்து சிலவற்றை செய்ய சொன்னால்.. ..... ஓடியொழிவோம்...
கஜன்: 30 வருட காலத்துக்கு மேலாக எம்மை வீழ்த்த முடியாத சிங்கள இராணுவத்துக்கு .. இப்போது முடிந்ததென்றால் யார் காரணம்? நம்பிக்கைத் துரோகத் தமிழர்களும்தான். அண்ணா..! நாங்கள் இருவருமே கதையே இருக்காது என எதிர்பார்க்கப்படுகிற "வேட்டைக்காரன்" திரைப்படத்துக்கு நல்ல விளம்பரம் தேடித்தருகிறோம்......... போதும் இனியும் வேண்டாம்.

இதே சிங்கள இசையமைப்பாளன் எம் தமிழருக்காக ஒருநாள் குரல் கொடுக்க மாட்டானா என்கிற நப்பாசை, தொட்டதுக்கெல்லாம் புறக்கணித்து உலகமேடையில் தமிழன் மலிந்து போகக் கூடாது என்ற வேட்கை உங்களிடம் வாதிடச் சொன்னது.
இளவரசன் வேலைப் பளுவில் முகநூலை முட வாதம் இத்துடன் முற்றுப்பெற்றது

No comments:

Post a Comment

நிறையவே திட்டவேணும்போல இருக்கும்... இருப்பினும் அவையடக்கமாய் ஒரு சில வார்த்தைகள் கிறுக்குங்கள்.